ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள சுவான் நதிக்கரையில் வீற்றிருக்கும் முதன்மையான மற்றும் புகழ் பெற்ற சுற்றுலாதலம் தான் உணா. பல்வேறு சிறந்த சுற்றுலாப்பகுதிகளை கொண்ட உணா மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. ‘உணா’ என்ற இந்த பெயர் சீக்கியர்களின் ஐந்தாவது குருவான ஸ்ரீ குரு அர்ஜன் தேவ் அவர்களால் வழங்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் சொல்கின்றனர்.
உணா என்ற சொல் 'வளர்ச்சி' என்று பொருள்படும் 'உண்ணத்தி' என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்ததாகும். பஞ்சாப் மாநிலத்திலிருந்த ஹோசியர்பூர் மாவட்டத்திலிருந்து 1972-ம் ஆண்டு உணா தனி மாவட்டமாக பிரிந்து வந்தது.
உணா நகரம், மத வழிபாட்டுத் தலங்களான தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாரா, பங்கானா லதியன் பிப்லு மற்றும் சிந்துபூரணி கோவில் ஆகியவற்றிற்காக புகழ் பெற்ற நகரமாகும்.
தேரா பாபா பார்பாக் சிங் குருத்துவாராவானது சீக்கியர்களிடையே மிகவும் புகழ்பெற்ற இடமாகும். உணாவில் இருந்து 40 கிமீ தொலைவிலுள்ள மலையின் உச்சியில் அமைந்திருக்கும் இந்த இடம், யூகலிப்டஸ் மரங்களால் சூழப்பட்டிருக்கும்.
சுற்றுலாப் பயணிகள் சோலா சிங்கி தார் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பங்கானா லதியான் பிப்லுவிற்கும் இங்கிருந்து சென்று வரலாம். இந்த இடத்திலிருந்த படியே, சற்று தொலைவில் அமைந்திருக்கும் கோவிந்த சாகர் ஏரியின் மனம் மயக்கும் அழகை காண முடியும்.
இந்து கடவுளான சிந்துபூரணியை வணங்குவதற்காக உள்ள மற்றுமொரு கோவில் சிந்துபூரணி கோவிலாகும். சோலா சிங்கி தார், பார்வெயின், குட்லெஹார் கோட்டைகள், ஷீட்லா தேவி கோவில், பாபா ருத்ரானந்தா ஆசிரமம் மற்றும் ஆம்ப் ஆகியவை இங்கு அமைந்துள்ள பிற முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.
உணா நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் வான்வழி, இரயில் வழி மற்றும் சாலை வழி போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. உணாவிற்கு வரத் திட்டமிடும் சுற்றுலாப்பயணிகள் மார்ச் மாதம் முதல் மே மாதத்தின் கடைசி வரை நீடித்திருக்கும் கோடைகாலத்தில் வருவது நல்லது. இந்த காலகட்டத்தில் உணாவின் பருவநிலை மிகவும் அருமையாகவும் மற்றும் வசதியானதாகவும் இருக்கும்.