சோலா சிங்கி கோட்டைகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கும் குட்லெஹார் கோட்டைகள் உணாவின் தலைசிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 4500மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கோட்டைகள் காங்க்ரா பகுதியை ஆண்ட சன்சார் சந்திரர் என்ற அரசரால் கட்டப்பட்டவைகளாகும். பெரிய பெரிய கற்பாளங்களைக் கொண்ட கூரையையுடைய இந்த கோட்டைகளை, சீக்கியர்களின் முதல் மகாராஜாவான ரஞ்சித் சிங் மகாராஜா 1809-ம் ஆண்டு புதுப்பித்தார்.
இங்கிருந்தவாறே கோவிந்த சாகர் ஏரியையும், போங் அணையையும் பார்ப்பது அற்புதமான காட்சியாக இருக்கும். ராய்ப்பூர் அரண்மனை, குட்லெஹார் காடுகள், பிலாஸ்பூர், பிப்லு மற்றும் பங்கானா ஆகியவை இந்த இடத்திற்கு அருகிலுள்ள பிற சுற்றுலா தலங்களாகும். காடுகளுக்குள் செல்வதற்கான பஸ் வசதி பங்கானா மற்றும் பிப்லுவில் இருந்து ஜரோலா வரை உள்ளது.