நுகான் நகரத்தில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற சுற்றுலாதலம் திரிலோக்பூர் கோவிலாகும். இந்த கோவில் நஹனில் இருந்து 23 கிமீ தொலைவிலும், கல்கா-அம்பாலா நெடுஞ்சாலையிலிருந்து 6 கிமீ தொலைவிலும் உள்ளது.
ராஜா திப் பிரகாஷ் என்பவரால் இந்த கோவில் 1573-ம் ஆண்டு கட்டப்பட்டது. மகாமாயா பால சுந்தரி தேவியினுடைய இந்த கோவிலுக்கு, வட இந்தியப் பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்து செல்வார்கள். இவர்களில் ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம்.
ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கும் நவராத்திரி கொண்டாட்டங்களின் போது இந்த கோவில் வளாகத்தில் ஒரு கண்காட்சியும் நடத்தப்படும். இந்த திருவிழாவின் போது எண்ணற்ற பக்தர்கள் மகாமாயா பால சுந்தரி தேவியின் அருளை பெறுவதற்காக வந்து செல்வார்கள். இந்திய புரணாங்களின் படி, இந்த கடவுள் வலிமை மற்றும் சக்தியின் இருப்பிடமாக கருதப்படுகிறார்.