நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகரத்தில் இருக்கும் அர்த்தனாரீஸ்வரர் கோவிலில் சிவபெருமான் 900 மீ உயரத்தில், இருபாலினம் கலந்து அர்த்தனாரீஸ்வரராக காட்சியளிக்கிறார்.
இங்கு குடிகொண்டிருக்கும் அர்த்தனாரீஸ்வரரின் உடலில் சக்தி அல்லது பார்வதி தேவி கலந்திருப்பது ஆண் மற்றும் பெண் சக்திகள் இரண்டறக் கலந்திருப்பதை உணர்த்துவதாக உள்ளது.
புராணக்கதைகளின் படி, சிவபெருமான் தன்னுடைய மனைவியான பார்வதி தேவிக்கு தன்னுடைய உடலின் இடப்பாகத்தை கொடுத்து விட்டதால், அவர்களிருவரும் என்றென்றும் பிரியாமல் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
எனவே சக்தி அல்லது பார்வதி தேவி தன்னுடைய ஆண் துணையான சிவபெருமானிடமிருந்து இணைபிரியாமல் இருப்பார் என்றும் நம்பப்படுகிறது. எனவே தான் இந்த கடவுள் அர்த்தனாரி என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு நிறுவப்பட்டிருக்கும் அர்த்தனாரீஸ்வரரின் சிலையானது பாதி ஆண் மற்றும் பாதி பெண்ணாகவும், இடையில் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications