ரஜத் பிரபாத், பச்மாரியின் மிகப்பெரும் நீர்வீழ்ச்சி ஆகும். சூரிய ஒளி, இந்த அருவியின் நீரில் பட்டுத் தெறிக்கும் போது இது வெள்ளி நிறங்கொண்டு ஜொலிப்பதனாலேயே இந்த நீர்வீழ்ச்சி ரஜத் பிரபாத் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
ரஜத் பிரபாத் என்பதன் உண்மையான அர்த்தம் “வெள்ளி அருவி” என்பதாகும்; ஏனெனில், ஹிந்தி மொழியில் ரஜத் என்றால் வெள்ளி என்றும் பிரபாத் என்றால் அருவி என்றும் அர்த்தமாகும்.
சுமார் 107 அடியில் பாயக்கூடிய ஒற்றை அருவியான இது, குதிரையின் வால் வடிவில் காணப்படுகிறது. இது இந்தியாவின் முப்பதாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். ரஜத் பிரபாத் “சத்புராவின் ராணி” என்று அறியப்படுகிறது. இது அப்ஸரா விஹாரிலிருந்து சுமார் 10 நிமிட நடைதூரத்தில் அமைந்துள்ளது.