பச்மாரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள படா மஹாதேவ் குகை, மஹாதேவ் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட கோயிலாகும்.
சுமார் 60 அடி நீளத்தைக் கொண்டுள்ள இக்குகையில் பிரம்மதேவர், மஹாவிஷ்ணு மற்றும் கணேஷருக்கான சந்நிதிகளையும் காணலாம். உள்ளூர் நம்பிக்கைகளின் படி, படா மஹாதேவ் குகையில் தாம் மஹாவிஷ்ணு தேவலோக அழகியான மோஹினியின் வடிவெடுத்து பஸ்மாசுரா என்ற அரக்கனை அழித்ததாகக் கருதப்படுகிறது.
இக்குகையில் இருந்து தொடர்ந்து வடிந்து கொண்டே இருக்கும் நீர், ஒரு குளமாகத் தேங்கி நிற்கிறது. இந்த குளத்தில் நீராடினால் தீய சக்திகள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். இங்கு வந்து வழிபடும் அதே வேளையில் சுற்றுப்புறத்தின் இயற்கை அழகையும் ரசித்துச் செல்லலாம்.