ஜடா ஷங்கர் குகை பச்மாரியில் உள்ள, இயற்கையாக உருவான ஒரு குகையாகும். சைவப் பாரம்பரியத்தை கடைபிடிப்போருக்கு, இது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமாகும்.
இக்குகையினுள் இயற்கையாக உருவான மிகப்பெரிய சிவலிங்க சிலை ஒன்று காணப்படுகிறது. புராணங்களின் படி, சிவபெருமான் அரக்கனாகிய பஸ்மாசுரனின் கண்ணில் படாமல் இங்கு ஒளிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்துப் புராணங்களில் கூறப்படும், 100 தலைப் பாம்பாகிய ஷேஷ்நாக்கின் வடிவில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு பாறை வடிவையும் இங்கு காணலாம். இக்குகையின் பாறைகள் சிவபெருமானின் ஜடா முடியை நினைவுபடுத்துவது போல் உள்ளதால், முடி என்பதைக் குறிக்கும் ஜடா என்ற பெயரிலிருந்தும், ஷங்கர் என்ற சிவனின் மற்றொரு பெயரிலிருந்தும், ஜடா ஷங்கர் குகைகள் என்ற பெயரைப் பெற்று இது விளங்குகிறது.
ஜம்பு த்விப் நீரோடை ஜடா ஷங்கர் குகைகளிலிருந்தே உருவாகிறது. இவ்விடம் பக்தர்களும், பயணிகளும் ஒன்று சொன்னாற் போல் பெருமளவில் கூடும் ஒரு இடமாகத் திகழ்கிறது.