பன்ஹாலா மாவட்டத்தில் அமைந்துள்ள இது 1008ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மரணத்தின் பிடியிலிருந்து சிவாஜி சாமர்த்தியமாக தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. சஜ்ஜ கோதி என்ற பெயருக்கு தண்டனைக்கூடம் என்பது பொருளாகும்.
இந்த சஜ்ஜ கோதி கட்டிடம் மூன்று தளங்களை கொண்டு முகலாய கட்டிட பாணியில் காட்சியளிக்கின்றது. இங்கு சம்பாஜி தன் பொறுப்பற்ற குற்ற செயல்பாடுகளுக்காக தன் தந்தையாலேயே சிறை வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பசுமையான சூழலின் மத்தியில் அமைந்துள்ள இந்த சஜ்ஜ கோதி ஸ்தலத்திலிருந்து அற்புதமான வாரணா பள்ளத்தாக்கை பார்த்து ரசிக்கலாம்.