பாரதீப்பில் உள்ள ஜகன்நாதர் கோவில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மதச்சார்பற்ற கலாச்சாரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில் ஒரு நேர்த்தியான தூணின் மேல் ஒரு கான்கிரீட் வளைவு கொண்ட அருணா ஸ்தம்ப எனப்படும் ஒரு 60 அடி உயர தூண் உள்ளது.
இங்கு இந்து, இஸ்லாமிய, கிறித்துவ, மற்றும் சீக்கிய மத புனித சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இடத்தில் எந்த விதமான இனவாத வேறுபாடுகளையும் இதுவரை கண்டது இல்லை என்று கூறப்படுகிறது.
வேறு எங்கு இல்லாத வழக்கமாக இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஜகன்நாதர் தேரோட்டத்தில் இந்துக்கள் அல்லாதவரும் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர். மற்ற நாடுகளில் இருந்து துறைமுக பகுதிக்கு வரும் பயணிகள் அனைவரும் ஜகன்நாதர் கோவிலை தரிசிக்க தவறுவதில்லை.
ஏனெனில் ஒரிசா மாநிலத்தில் உள்ள இந்த ஜகன்நாதர் கோவில் மட்டுமே மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் அனுமதிக்கின்றது. இந்த கோவிலுக்கு வரும் போது, இங்கு வழங்கப்படும் அப்ஹாதா எனப்படும் பிரசாதத்தை ருசி பார்க்க தவறுவதில்லை.



Click it and Unblock the Notifications