இந்திய அரசுக்கு சொந்தமான பாரதீப் துறைமுகம், இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். ராகவேந்திரரால் நிறுவப்பட்ட இந்த துறைமுகம் ஒரிசாவின் முதன்மையான துறைமுகமாகக் கருதப்படுகிறது.
இந்த துறைமுகம் கையாளும் மிக முக்கிய வணிபப் பொருளாக வெப்ப நிலக்கரி மற்றும் இரும்பு உள்ளது. இந்த துறைமுகம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 மில்லியன் டன்கள் சர்க்கு கையாளும் திறனை பெற்றுள்ளது.
பாரதீப் துறைமுகம், வங்காள விரிகுடாவும் மகாநதியும் சந்திக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஒரு ஆழ் நீர் துறைமுகமாகும். இங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட லகூன் மூலம் இந்த துறைமுகம் பெரும் ஆதாயம் அடைகின்றது.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் இந்த துறைமுகம் ஒரு செயற்கையாக கட்டபட்ட துறைமுகம் ஆகும். இந்த துறைமுகத்தில் உள்ள 14 தளமானது மிகக் குறைந்த அளவாக் 43 அடி ஆழமே உள்ளது.
எனினும் இந்தத் தளம் 70,000 DWT சரக்குகளை கையாளும் திறனைப் பெற்றுள்ளது. மேலும் பாரதீப் துறைமுகப் பகுதியில் , எஃகு ஆலைகள், அலுமினிய சுத்திகரிப்பு, வெப்ப மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இன்னும் ஒரு முக்கிய தொழில்துறை மையங்கள் நிறைந்துள்ளதால் இது வேகமாக வளர்ந்து வருகின்றது.