மனேர் ஷரீஃப், சூஃபி துறவிகளான மக்தூம் யஹ்யா மனேரி மற்றும் மக்தூம் ஷா தௌலத் ஆகிய இருவருடைய சமாதிகளின் உறைவிடமாகும். இவ்விரு சமாதிகளும் பாரி தர்கா (பெரிய மசூதி) மற்றும் சோட்டி தர்கா (சிறிய மசூதி) என்று அறியப்படுகின்றன.
மனேர் அதன் பிரத்யேக சுவை கொண்டு தயாரிக்கப்படும் லட்டுகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சோனே நதியின் கற்கண்டாக இனிக்கும் தண்ணீரில் செய்யப்படுவதாக உள்ளூர் வியாபாரிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.