சாரதா கோயில் இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ஜி.டி பிர்லாவால் 20-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயில் பி.ஐ.டி.ஸ் பிலானியின் வித்ய விஹார் வளாகத்தினுள்ளே அமைந்திருக்கிறது.
ராஜஸ்தானின் மக்ரானா பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட அழகிய சலவைக் கற்களால் சாரதா கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் இந்தோ-ஆர்யன் கட்டிடக்கலை பாணியை பின்பற்றி, கண்டாரியா மஹாதியோ மற்றும் கஜுராஹோ கோயில்களின் பாதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த கோயில் கற்ப கிருஹா, பிரதக்ஷ்ணபதா, அந்தராலா, மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்று ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
சாரதா கோயில் அறிவியலும், ஆன்மீகமும் இணைந்த நவீனமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த கோயிலின் வெளிப்புறத்தில் காணப்படும் தத்துவவாதிகள், ஞானிகள் மற்றும் அறிவியலாளர்களின் உருவங்கள் பெருநகரங்களில் காணக்கூடிய நினைவுச் சின்னங்களை நமக்கு ஞாபகபடுத்தும்.