ஜகன்னாதர் கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், பூரியின் வடக்குப்புற முனையில் அமைந்துள்ள சக்ர தீர்த்தா கோயில் ஒரு முக்கிய யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயில் சக்ர நாராயணா கோயில் என்றும், சக்ர நரசிம்மா கோயில் என்றும் சக்ர நர்சிங்கா கோயில் என்றும் பலவாறாக வழங்கப்படுகிறது.
ஜகன்னாதரின் தெய்வீக ஆயுதமான சக்ராயுதத்தைக் குறிக்கும் வண்ணம், தண்ணீரில் ஒரு மிகப் பெரிய சக்கரம் கறுப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டு, சக்ரநாராயணா என்ற திருநாமம் கொண்ட நாராயணரின் திருவுருவச்சிலை அதற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னொரு சமயத்தில், புயல் ஒன்று பூரியை தாக்கிய போது, ஜகன்னாதர் கோயிலின் மேற்பகுதியில் இருந்த சக்கரம் வானில் பறந்து சக்ரதீர்த்தத்தில் விழுந்ததாகவும், அதே சமயத்தில், ஜகன்னாதர் கோயிலில் உள்ள தெய்வங்களின் சிலைகளை செதுக்க உதவிய தரு என்ற ஒரு மரக்கட்டை கடல் வழியாக பயணித்து வந்து, முதன் முறையாக சக்ரதீர்த்தத்தின் நிலத்தைத் தொட்டதாகவும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications