ராஜ்கோட்டில் உள்ள தாங்கரா பல்வேறு காரணங்களுக்காக புகழ் பெற்று விளங்கும் இடமாகும். ஆரிய சமாஜத்தை உருவாக்கிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறப்பிடமாகவும், பருத்தி அதிகளவில் உற்பத்தி செய்யும் மையமாகவும் மற்றும் கண்ணைப் பறிக்கும் வகையிலான வெள்ளி நகைகள் செய்யப்படும் இடமாகவும் இது உள்ளது. இந்த சிறுநகரம் ராஜ்கோட்டிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது.