சௌராஷ்டிரா பகுதியிலுள்ள பழமையான அருங்காட்சியகமான இது குஜராத்தின் மிகவும் முக்கியமான பார்வையிடமாகும். பசுமையான சுற்றுச்சூழலில், மதிப்புமிக்க தொல்பொருட்கள் மற்றும் ஓவியங்களை இவ்விடம் கொண்டிருக்கிறது.
ஜுப்ளீ கார்டன்ஸ்-ல் உள்ள விக்டோரியா அரசி நினைவு கட்டிடத்தில் உள்ள இந்த மியூசியம், 1881 முதல் 1889-ம் ஆண்டு வரை கத்தியவார் ஏஜென்ஸியின் அரசியல் தூதுவராக இருந்த கர்னல் ஜான் வாட்சன் என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
வாட்சனின் கலைச் சேகரிப்புகள், நாணயவியல் பகுதி, வரலாற்று தொல்பொருட்கள் மற்றும் மொகஞ்சதாரோ தொல்பொருட்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டு வந்த துணிகள் மற்றும் நகைகள் ஆகியவற்றுடன் மேலும் பல வரலாற்று சின்னங்களை கொண்டுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும் இந்த மியூசியம், பொது விடுமுiறை நாட்களிலும், மாற்று ஞாயிற்றுக்கிழமைகளிலும் (Alternative Sundays) விடுமுறையில் இருக்கும்.