சத்திஸ்ஹர் மாநிலத்தில் ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள இந்த பிர்க்கா கிராமம் ஒரு முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலமாகும். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரு சிவன் கோயில் இந்த கிராமத்தில் உள்ளது.
கண்டாய் தாலுக்காவிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள இந்த கிராமம் ரம்மியமான இயற்கைக்காட்சிகளுடன் மலைகளால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. இந்த புராதனக்கோயிலின் ஒரு பகுதி சிதிலமடைந்து காணப்பட்டாலும் இதன் கருவறை மற்றும் மண்டப அமைப்புகள் நல்ல நிலையில் காணப்படுகின்றன.
யோனிபீடம் என்றழைக்கப்படும் கருவறையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதோடு கோயிலை சுற்றி சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டிருக்கிறது.
இந்த கோயில் நுழைவாயிற்பகுதியில் நுணுக்கமான அலங்கார அம்சங்கள் காணப்படுகின்றன. நின்ற நிலையில் வீற்றிருக்கும் ஒரு சிவனின் உருவம் மற்றும் கட்ட-பல்லவ சிற்ப வடிப்புகளை இந்த வாசற்பகுதியில் பார்க்க முடிகிறது. பைரவ நந்தி மற்றும் கணேச சிலைகள் போன்றவையும் இந்த கோயில் வளாகத்தின் உள்ளே அமைந்திருக்கின்றன.
புராதன கோயிற்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த கோயில் 10 -11ம் நூற்றாண்டுகளில் நாகவம்ஷி அரசர்களால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. பரந்த இந்திய பூமியில் மஹோன்னதமாக விளங்கிய கோயிற்கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்கான மற்றுமொரு சான்றாக இந்த கோயில் வீற்றிருக்கிறது.