ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் இந்த முச்சல் மஹாவீர் கோயில் மஹாவீரருக்காக எழுப்பப்பட்டதாகும். இது கனேராவ் கிராமத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் கும்பல்கர் சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.
மீசையுடன் காட்சியளிக்கும் சிவபெருமான் சிலைக்காக இந்தக்கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இக்கோயிலின் வாசலில் இரண்டு யானை சிலைகள் காவல் காப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே ‘கரஸியா’ எனப்படும் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. பயணிகள் பல அழகிய பாரம்பரிய உடைகளையும் இங்கு வாங்கலாம்.