ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் இந்த நர்லய் ஆகும். இது சுற்றுலா நகரமான ரணக்பூரிலிருந்து 6கி.மீ தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஸ்தலத்தில் பல ஹிந்துக்கோயில்கள் மற்றும் ஜெயின் கோயில்களை சுற்றுலாப்பயணிகள் காணலாம். இங்குள்ள முதல் ஜெயின் தீர்த்தங்கரரான ஆதிநாதருக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயிலில் காணப்படும் சுவரோவியங்கள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் சுற்றுலாப்பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது.