சந்திரஷீலா சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 3680 மீ உயரத்தில் இந்த யாத்ரீக ஸ்தலம் அமைந்துள்ளது. பஞ்ச கேதார் ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த ஸ்தலம் சிவபெருமானுக்கான கோயிலை கொண்டுள்ளது.
புராணிக கதைகளின்படி சிவபெருமான் காளை வடிவத்தில் பூமியில் புதையுண்டு திரும்பவும் வெளிப்பட்டபோது அவரது கை இந்த ஸ்தலத்தில் வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கோயிலின் சிவலிங்கத்துக்கு அருகிலேயே ஆதி குரு சங்கராச்சாரியாரின் இரண்டரை அடி சிலையும் காணப்படுகிறது. இந்த ஸ்தலத்திலிருந்து கேதார்நாத் சிகரங்கள், கங்காத்ரி மற்றும் யமுனோத்ரி சிகரங்கள் ஆகியவற்றின் அழகை யாத்ரீகர்கள் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
நந்ததேவி கோயில் மற்றும் ஆகாசகங்கை நீர்வீழ்ச்சி ஆகிய முக்கியமான அம்சங்களும் இந்த துங்கநாத் ஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன. சோப்டா சாலை வழியாக இந்த நந்ததேவி கோயிலுக்கு சென்றடையலாம்.