சாரநாத்தின் சிதைவுகளினூடே அமைந்திருக்கும் மூலகாந்தா குடி விஹார் மற்ற கோவில்களின் கட்டிடக்கலை அமைப்புகளிலிருந்து சற்றே மாறுபட்ட வகையில் கட்டப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த கோவில் 1931-ம் ஆண்டில் மகா போதி சங்கத்தால் கட்டப்பட்ட புதிய வரவாகும். விரிவான வேலைப்பாடுகள் மற்றும் வகைப்பாடுகளை பராமரித்து வரும் இந்த கோவிலின் உட்புறங்களில் அழகிய முரல் மற்றம் சுவரோவிங்களை கோசெட்சு நோசு என்ற புகழ் பெற்ற ஜப்பானிய ஓவியர் தீட்டியுள்ளார். உட்பகுதிகளில் முரல் ஓவியங்கள் உள்ளதைப் போலவே, வெளிப்பகுதிகளிலும் முரல் ஓவியங்கள் உள்ளன.
ஜப்பானிய இராஜ குடும்பத்தால் பரிசளிக்கப்பட்ட ஒரு பெரிய மணியும் இந்த கோவிலின் நுழைவாயிலருகே அழகாக காதியளித்துக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் தங்கத்தாலான புத்தருடைய சிலையொன்று தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்றினால் உருவான போதி மரம் ஒன்றும் இங்கே உள்ளது. ஏனெனில், 2500 ஆண்டுகளுக்கு முன்னர், புத்தருக்கு ஞானோதயம் கிடைத்த போதி மரத்திலிருந்து தான், இலங்கையில் உள்ள அந்த மரம் உருவாகியிருக்கிறது.