இந்தியாவில் பௌத்தமதத்தின் பிறப்பு மற்றும் வளர்ச்சியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய இடமாக சாரநாத் உள்ளது. இந்த இடத்தில் தான் புத்தர் தனது முதல் ஐந்து சீடர்களுக்கு தனது முதல் போதனைகள் மற்றும் தர்மா கொள்கையையும் வெளியிட்டார், நான்கு தெய்வீக உண்மைகள் மற்றும் எண்-வழி மார்க்கங்கள் ஆகியவற்றையும் அவர் இங்குதான் வெளியிட்டார்.
பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவி, வட இந்தியா முழுவதும் பல்வேறு ஸ்தூபிகள் மற்றும் தூண்களை நிறுவிய போது சாரநாத்திலும் அவற்றில் சிவற்றை அமைத்தார்.
இந்திய தொல்பொருள் நிறுவனமும் 1930-ம் ஆண்டிலிருந்து பல்வேறு நினைவுச் சின்னங்கள, கட்டிடங்கள் மற்றும் தொல்பொருட்களை இங்கிருக்கும் தொல்பொருள் மற்றும் அகழ்வாய்வு பகுதிகளில் அமைத்துள்ளது.
இங்கே கண்டறியப் பட்ட தொல்பொருட்கள் சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. இந்த தொல்பொருட்கள் கி.மு 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த பௌத்த கலைப்பொருட்களாகும்.இந்த அருங்காட்சியகத்தில் ஐந்து காட்சி சாலைகள் மற்றும் இரண்டு வராண்டாக்கள் ஆகியவை உள்ளன.



Click it and Unblock the Notifications