சவன்துர்கா மலைப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் இந்த நரசிம்மஸ்வாமி கோயில் பயணிகள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். இந்த யாத்ரீக ஸ்தலம் சவன்துர்கா மலையின் அடிவாரத்திலேயே அமைந்துள்ளது.
இந்த கோயிலில் இயற்கையாகவே பாறையில் உருவாகியிருக்கும் நரசிம்மஸ்வாமி சிலையை பயணிகள் பார்க்கலாம். அமைதியான இயற்கைச் சூழலின் மத்தியில் ஏகாந்தமாக பொழுதை கழிக்க விரும்பும் பயணிகளுக்கு இது மிகவும் உகந்த ஸ்தலமாகும்.