நேரம் இருப்பின் சவன்துர்கா மலைப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் இந்த திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கும் விஜயம் செய்யலாம். இந்த நீர்த்தேக்க அமைப்பு 1933ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானம் பாரத ரத்னா சர் எம். விஸ்வேஸ்வரய்யாவால் மேற்பார்வையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் காவேரி ஆற்றின் துணை ஆறாகிய அர்க்காவதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. இது பெங்களூர் நகரத்தின் நீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் நீர் பகிர்மான கழிவு நீர் வாரியத்தால் (BWSSB) இந்த நீர்த்தேக்கம் பயன்படுத்தப்படுகிறது.இந்த நீர்த்தேக்கம் சாமராஜசாகர் நீர்த்தேக்கம் அல்லது டி.ஜி.ஹல்லி அணை என்றும் அழைக்கப்படுகிறது. சிற்றுலாவுக்கும் பறவை வேடிக்கைக்கும் மிக உகந்ததாக இந்த அணைப்பகுதி பிரசித்தமாக அறியப்படுகிறது.
செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள இடைப்பட்ட காலம் இந்த திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கத்துக்கு விஜயம் செய்ய சிறந்த காலமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications