ஷேக்ஹாவதி நகரத்திலிருந்து 82 கி.மீ தூரத்தில் சுரு மாவட்டம் அமந்துள்ளது. இது எண்ணற்ற ஹவேலி மாளிகைகள் மற்றும் கோட்டைகளுடன் ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற மாவட்டமாக திகழ்கிறது.
இவற்றின் வெளிச்சுவர் அமைப்புகளில் பொறிக்கப்பட்டுள்ள சித்திர வேலைப்பாடுகளில் இம்மண்ணின் நாயகர்கள் பற்றிய கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. கன்ஹையாலால் பாக்லா ஹவேலி, சுராணா ஹவேலி மற்றும் கால்ஜி கா காம்ரா ஆகிய ஹவேலிகளில் தோலா மற்றும் மாரு ஆகியோரின் கதைகள் பொதிக்கப்பட்டுள்ளன.
தாக்குர் குஷால் சிங் என்பவரால் 1739ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள கோட்டை இப்பகுதியின் விசேஷ அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. நாகர் ஸ்ரீ மியூசியம், லட்சுமிநாராயண் சந்த்கோத்தியா ஹவேலி மற்றும் லட்சுமிநாராயண்ஜி கோயில் ஆகியவையும் இங்கு அவசியம் பார்க்க வேண்டிய முக்கியத்தலங்களாகும்.
இவை தவிர ஆத் கம்ப் சாத்ரி மற்றும் கோண்டியா சாத்ரி போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. இந்த சாத்ரிகளில் (சமாதி நினைவுச்சின்னங்கள்) காணப்படும் அழகிய சுவரோவியங்கள் மற்றும் ஓவியங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கின்றன.
ரகுநாத்ஜி கோயில், சந்த்கோத்தியா கோயில், ஜம்மா மஸ்ஜித், நாத்ஜி கி தோரா, சேத்னி கா ஜோஹ்ரா மற்றும் பாலாஜி கோயில் ஆகியவையும் இம்மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.