தீர்த்தன் வேலி எனப்படும் இந்த பள்ளத்தாக்கு பகுதி ஷோஜா நகரத்திற்கு அருகில் உள்ளது. கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனும் காட்டுயிர் சரணாலயத்திற்காக இப்பள்ளத்தாக்குப்பகுதி பிரசித்தி பெற்றுள்ளது.
பல்லுயிர்ச்சூழல் நிலவும் இயற்கைப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள இப்பிரதேசத்தினை சுற்றுப்புற மாசிலிருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பயணிகள் ஆற்றில் மீன் பிடிக்கும் பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழலாம்.