தீவிரமான இயற்கை ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனி போடக்கூடிய ஏராளமான அம்சங்களுடன் இந்த பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் காத்திருக்கிறது.
மஹாசமுந்த் மாவாட்டத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் இந்த பர்ணவபாரா காட்டுயிர் சரணாலயம் 245 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 1972ம் ஆண்டு இது காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
சமவெளிப்பகுதி மற்றும் மலைப்பிரதேசம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இந்த சரணாலய வனப்பகுதி 265 மீ மற்றும் 400 மீ உயரங்களில் அமைந்திருக்கிறது. நான்கு கொம்பு மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, மலைப்பாம்பு, குரைக்கும் மான், கழுதைப்புலி, முள்ளம்பன்றி, புள்ளிமான் மற்றும் கருப்பு மான் போன்றவை இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.
பறவை ரசிகர்களை ஈர்க்கும் பல வித்தியாசமான பறவை இனங்களும் இங்கு வாழ்கின்றன. ஹெரான், புல்புல், பெருங்கொக்கு மற்றும் காட்டுக்கிளி போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.
இலையுதிர் காடுகளால் நிரம்பியுள்ள இந்த சரணாலயத்தில் தெண்டு, பேர், சீமால், சால், தேக்கு மற்றும் மூங்கில் மரங்கள் அதிகமாக வளர்ந்திருக்கின்றன.