துர்துரியா எனும் இந்த சிறிய காட்டுப்பகுதி கிராமம் சிர்பூரிலிருந்து 24 கி.மீ தூரத்தில் துர்துரியா எனும் நீரூற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்த நீரூற்று ‘சுர்சுரி கங்கா’ என்றும் அழைக்கப்படுகிறது. பௌத்த சின்னங்கள் மற்றும் அதற்கு பிந்தைய வரலாற்றுச்சின்னங்கள் போன்றவற்றின் சிதிலங்கள் இப்பகுதியில் ஏராளமாக நிரம்பியுள்ளன.
இந்த வரலாற்று சிதிலங்களில் நுணுக்கமான அலங்கார வடிப்புகள் கொண்ட தூண்கள், செங்கல்லால் ஆன புத்த ஸ்தூபிகள், நான்கு கரங்களை கொண்ட மஹாவிஷ்ணு சிலைகள், கணேஷா சிலைகள் மற்றும் ஆற்றுக் குளியல்துறை படிக்கட்டுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
இந்த கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள வால்மீகி ஆசிரமம் ஒன்றில் வைசாக பூர்ணிமா மற்றும் அமாவாசை போன்ற திருநாட்களில் கோலாகலமான திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.