புத்தரின் மிக முக்கியமான சீடரால் இந்த ஆனந்தபிந்திகா ஸ்தூபி நிறுவப்பட்டிருக்கிறது. இதற்கு ‘ ஆதரவற்றோர்க்கு அன்னமளித்திடுபவர்’ என்பது பொருளாகும். தற்போது சிதிலமடைந்து காணப்பட்டாலும் இந்த ஸ்தூபி நுணுக்கமான கலையம்சங்கள் சித்திரப்பொறிப்புகள் ஆகியவற்றுடன் பிரமிக்க வைக்கிறது.
ராஜகஹா எனும் இடத்தில் இந்த ஆனந்தபிந்திகா சீடரை சந்தித்து அவரது விண்ணப்பத்தின் பேரில் புத்தர் இந்த ஷ்ரவஸ்தி நகரத்திற்கு வந்து வசித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நிகழ்வின் சின்னமாகத்தான் இந்த ஸ்தூபியை ஆனந்தபிந்திகா நிர்மாணித்துள்ளார்.



Click it and Unblock the Notifications