திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஸ்ரீரங்கம் நகரில் அமைந்துள்ளது இக்கோயில். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், இங்கு விசேஷ பூஜை நடைபெறுவதால், இந்நாட்களில், கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்கள், இனிப்புகளை காணிக்கையாக படைக்கின்றனர். ஆனால், அரிசி மாவு, நெய், பருப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும், அனைத்து கடவுள்களுக்கும் விருப்பமான “மாவிளக்கு மாவு” தான் இங்கு முக்கிய காணிக்கையாகக் கருதப்படுகிறது.
ஆன்மீகப் பெருமைகள் பல பெற்றுள்ள இக்கோயிலை, இங்கு வரும் யாத்ரீகர்களைப் போலவே இப்பகுதி மக்களும் கொண்டாடுகின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இங்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில், மற்றுமொரு மிகப் பிரபலமான மலர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழா, “மலர்ச்சொறிதல்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.