ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோயில், “ரங்கநாதஸ்வாமி” என்றழைக்கப்படும் மஹா விஷ்ணுவுக்காக எழுப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இங்கு மஹா விஷ்ணு, சாய்ந்து பள்ளி கொண்ட நிலையில் காணப்படுகிறார்.
அசலான திராவிட கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக, விளங்குகிற இக்கோயில், ஆழ்வார்களால் பாடப்பெற்ற தெய்வீக இலக்கியமான, திவ்வியப்பிரபந்தத்தில், பல வித புகழுரைகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில், மஹா விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் முதலாவதாகக் கருதப்படுகிறது.
தென்னிந்தியாவின் வைஷ்ணவத் திருத்தலங்களுள் மிகவும் புகழ்பெற்ற இக்கோயிலைப் பற்றி பல புராணங்களும், கதைகளும் உள்ளன. கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ள இக்கோயில், எளிதாக தாக்குதலுக்குள்ளாகக்கூடிய இடத்தில் அமைந்துள்ளதனால், இது ‘ஆற்றல்’ மற்றும் ‘பலத்துக்கு’ பெயர் பெற்று விளங்குகிறது.
இக்கோயில், இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, முற்காலத்தில், டச்சு, போர்ச்சுகீஸ் மற்றும் ஆங்கிலேயப் படைகளினால் தாக்குதலுக்குள்ளானது. இவை எல்லாவற்றையும் தாண்டி, காலங்காலமாக இக்கோயில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.