1889-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மியூசியம் சர்தார் சங்ராலயா என்றும் அழைக்கப்படுகிறது. சூரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உணர்த்தும் பதிவுகளை இந்த மியூசியம் பெற்றிருக்கிறது.
இங்குள்ள கோளரங்கத்தில் அண்டவெளியைப் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக தினசரி காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நர்கோல் 8-வது தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 30 கிமீ தொலைவில், குஜராத்தின் வாலாசாத் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான நர்கோல், ஒரு அமைதியான கடற்கரை சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.
கடலாமைகளை (Sea Turtles) அதிக அளவிலும், சவுக்கு மரங்களை கரையிலும் கொண்டிருக்கும் நர்கோல் கடற்கரை காண்பவரின் கண்களுக்கு விருந்தளிக்கும் இடமாகும்.
சாலை மற்றும் இரயில் வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டிருக்கும் இந்த சிறிய நகரத்தில், சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் மும்பையிலிருந்து வரும் பார்ஸிகளுக்கான ஒரு அகியாரியும் (நெருப்பு கோவில்), ஸ்ரீ சுவாமி நாராயண் கோவிலும் உள்ளன. நர்கோலுக்கு அருகில் உள்ள சஞ்சன் இரயில் நிலையம் 12 கிமீ தொலைவில் உள்ளது.