புத்தேன் பள்ளி அல்லது அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்’ சர்ச் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயமானது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலையம்சங்கள் நிரம்பியதாகவும், திரிசூர் நகரத்தின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் காட்சியளிக்கிறது.
பல வருடங்கள் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் வடிவமைப்பில் பல்வேறு குழுக்களின் பங்களிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க இந்தோ-காதிக் பாணி தேவாலயங்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது.
ஆன்மீக அடிப்படையில் மட்டுமல்லாமல் கலைப்படைப்பாகவும் இது பிரமிப்பூட்டும் பிரகாசத்தை கொண்டுள்ளது. 25,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பஸிலிகா தேவாலயம் இந்தியாவிலேயே மிகப்பெரியதாகவும், ஆசியாவிலேயே மூன்றாவது உயரமான தேவாலயமாகவும் கீர்த்தியுடன் அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications