திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் சிவன் மலை அமைந்துள்ளது. முருகப்பெருமான் இங்கு எளுந்தருளியுள்ளார். இங்கு நடைபெறும் புகழ் பெற்ற தைப்பூச விழாவில், கலந்துகொள்ள ஏராளமான பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வருகை புரிகிறார்கள். தைப்பூச விழாவில் மூன்று நாட்கள் நடைபெறும் “தேரோட்டம்” மிக முக்கியமானது.
மலையுச்சியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலுக்கு, மலை அடிவாரத்திலிருந்து கட்டப்பட்டுள்ள 450 படிகளில் ஏறிச் செல்லவேண்டும். இக்கோவிலை வந்தடைய சாலைப் போக்குவரத்து வசதிகள் உண்டு.
இங்கு நடைபெறும் புகழ் பெற்ற சஷ்டித் திருவிழா காங்கேயத்திற்கு அருகில் வாழும் மக்களால் மிக பக்தியுடன் விமரிசையாக கொண்டாடப் படுகிறது.



Click it and Unblock the Notifications