கபில் முனியின் ஆஸ்ரமம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில், கந்தியாத் என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. கறுப்பு பலகை கூரைகள் மற்றும் சிறிய ஜன்னல்கள் கொண்ட வீடுகள் நிறைந்து, கர்வால் பகுதியில் காணப்படும் ஒரு மாதிரி கிராமமாகவே காணப்படுகிறது.
கபில் முனியின் ஆஸ்ரமத்தை அடைய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். இவ்வாஸ்ரமம், சிவபெருமானின் அருளை வேண்டி இங்கு தவம் புரிந்த முனிவரான கபில் முனிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், கபிலேஷ்வர் மஹாதேவ் என்றழைக்கப்படும் சிவலிங்கம் ஒன்று, சிவபெருமான் காட்சியளித்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, சுமார் 5 கி.மீ. தொலைவில் ராமா கிராமத்தில் அமைந்துள்ள ராமர் கோயிலுக்கும் பயணிகள் சென்று வழிபட்டு வரலாம்.



Click it and Unblock the Notifications