1) டாம்பெகார் வாடா
வதோதராவின் திவான் மாளிகையாக இந்த வீடு இருந்தது. மராத்திய பாரம்பரியப்படி கட்டப்பட்டுள்ளதாகவும், மகாபாரதம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் ஆங்கிலோ-மராத்திய போர் ஆகியவற்றைப் பற்றி வரையப்பட்ட சுவரோவியங்களுக்காகவும் மிகவும் புகழ் பெற்றிருக்கும் இந்த இடம் தற்பொழுது இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.
2) கீர்த்தி மந்திர்
1936-ல் கட்டப்பட்ட கெய்க்வாட் அரச குடும்பத்தினரின் கல்லறையாக இருக்கும் கீர்த்தி மந்திர், மஹாராஜா சயாஜிராவின் 7-வது பிறந்த நாளின் போது அவருடைய கீர்த்திமிக்க மூதாதையர்களுக்காக உருவாக்கப்பட்டது.
இதன் கோபுரத்தில் சூரியன், சந்திரன் மற்றும் பூமியின் வெண்கல சிற்பங்களும் மற்றும் பிரிக்கப்படாத இந்தியாவின் படமும் உள்ளது. சாந்தி நிகேதனின் புகழ் பெற்ற ஓவியரான நந்தலால் போஸின் முரல் ஓவியங்களும் இந்த கட்டிடத்தில் உள்ளன. இந்த முரல் ஓவியங்களில் மகாபாரத காட்சிகளும், மீரா பாயின் வாழ்க்கையும் வரையப்பட்டிருக்கிறது.
3) குத்புதீன் ஹஜிரா
குத்புதீன் முகம்மது கான் மற்றும் அவருடைய மகன் நௌராங் கான் ஆகியோரின் கல்லறையாகவே குத்புதீன் ஹஜிரா கல்லறை உள்ளது. அவர்கள் முகலாய பேரரசர் அக்பரின் தளபதிகளாகவும் மற்றும் ஆளுநர்களாகவும் இருந்தனர்.
1586-ம் ஆண்டு கட்டப்பட்ட கல்லறையான இதில் அழகாக செதுக்கப்பட்ட கற்களாலான ஜன்னல்களும் மற்றும் அருகில் ஒரு படிக்கிணறும் உள்ளன. இன்று வதோதரா நகரத்தில் உள்ள பழமையான முகலாய கட்டிடங்களில் ஒன்றாக இது உள்ளது.
4) நியாயா மந்திர்
வதோதரா நகரத்தின் நீதிமன்ற கூட்டங்கள் நடக்கும் இடமாக நியாயா மந்திர் அல்லது 'நீதியின் கோவில்' உள்ளது. மஹாராஜா மூன்றாம் சயாஜியின் மனைவி சிம்னா பாயின் நினைவாக பைசாண்டிய கட்டிடக்கலையில் இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மொசைக் டைல்களில் பைசாண்டிய பாணியில் உருவாக்கப்பட்ட மஹாராணியின் சிலையொன்றும் மத்திய கூடத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications