வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இரண்டு காரணங்களுக்காக பறவை ஆர்வலர்களையும், பறவை ஆராய்ச்சியாளர்களின் கவனத்தையும் நாடு முழுவதும் இருந்து ஈர்க்கிறது.
முதலாவதாக, வரலாற்றை பின்னோக்கி பார்போமானால் இது இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட பறவைகள் சரணலாயமாகும். இரண்டாவதாக உள்ளூர் சமூகத்தினாரால் இந்த சரணாலயம் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.
பருவகால பறவைகளின் வருகை காரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நாடு முழுவதிலும் இருந்து பறவை ஆர்வலர்களையும் பறவைகளை நேசிப்பவர்களையும் ஈர்க்கிறது.
அரிய மற்றும் வித்தியாசமான பறவை இனங்களான கர்கனெய், ஆஸ்திரேலியாவின் கிரே பெலிகன், இலங்கையின் பாம்பு பறவை, கிரே ஹெரான், கிளாஸி ஐபிஸ், திறந்த அலகு நாரை, சைபீரிய கொக்கு மற்றும் ஸ்பாட் பில்ட் டக் முதலியவை அடங்கும்.
இந்த சரணாலயத்தில் பல சிறிய ஏரிகள் சேர்ந்து சுமார் 74 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. பல அரிய வகை ஐரோப்பிய பறவை இனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த சரணாலயத்திற்கு வருகை தருகின்றன.