மாநில அரசு அருங்காட்சியகம் வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் லட்சுமணஸ்வாமி டவுண் எனும் பகுதியில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.
1985ம் ஆண்டில் இது பொது மக்களுக்காக திறக்கப்பட்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் எட்டு காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன. மாவட்ட வரலாறு, வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய காலம், ஓவியக்கலை, விலங்கியல், கற்சிற்பங்கள், நாணயச்சேகரிப்புகள், செப்புப்பொருட்கள் மற்றும் மானுடவியல் போன்ற எட்டு தனிப்பிரிவுகளுக்கான காட்சிக்கூடங்கள் இது கொண்டுள்ளது.
வட ஆற்காடு மண்டலத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் குறித்த காட்சியமைப்புகளையும் இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். விக்கிரம ராஜ சிங்கர் பயன்படுத்திய தந்தத்தால் ஆன சதுரங்கக்காய்கள் மற்றும் நாணயங்களை இங்கு பார்வையாளர்கள் பார்க்கலாம்.
செம்பால் ஆன ஒரு இரட்டை வாள் ஒன்றும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பிற்கால பல்லவர் காலம் மற்றும் விஜயநகர ஆட்சிக்காலத்துக்குரிய விரிவான கல்வெட்டுகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பின்னர் 2 மணி முதல் 5 மணி வரையும் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.