வைனு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த காவலூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வானோக்கியை கொண்டுள்ளது.
டாக்டர் வைனு பாப்பு எனும் புகழ்பெற்ற இந்திய வான் இயற்பியலாளரை கௌரவிக்கும் விதமாக இந்த மையத்திற்கு அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்தில் இந்த வானோக்கு மையம் அமைந்திருக்கிறது.
காவலூர் வானோக்கு மையத்தில் 1 மீ கார்ல் ஜெய்ஸ் ஆடியும் (லென்ஸ்) 2.3 மீ ஆடியைக்கொண்ட வைனு பாப்பு எனும் மற்றொரு வானோக்கியும் இந்த மையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இடமாக தேர்ந்தெடுத்து இந்த வானோக்கு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் பூமியின் வடகோளம் மற்றும் தென்கோளம் சம்பந்தப்பட்ட வானியல் மற்றும் புவியியல் அம்சங்களை ஆய்வு செய்வது எளிதாக உள்ளது. பல நவீன உபகரணங்களின் உதவியுடன் இந்த ஆய்வு மையத்தில் பல ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. நட்சத்திரக்குடும்பங்கள், சூரிய வெடிப்புகள், சூரியக்குடும்பம் தொடர்பான பல ஆய்வுத்திட்டங்கள் இங்கு செயல்பாட்டில் உள்ளன.