வேலூர் நகரின் மையப்பகுதியில் கே.வி ரோடு எனும் சாலையில் இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா ஞாபகார்த்தமாக இந்த மணிக்கூண்டு எழுப்பப்பட்டிருக்கிறது.
முதலாம் உலகப்போரில் உயிரிழந்த 14 ஆங்கிலேய போர்வீரர்களுக்கு இந்த சின்னம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வேலூர் வரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய பழமையான வரலாற்றுச்சின்னமாக இது அமைந்துள்ளது.
தற்போது இந்த மணிக்கூண்டு வளாகம் முக்கியமான மலர் அங்காடியாக லாங் பஜார் பகுதியில் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.