விருஞ்சிபுரம் எனும் இந்த சிறிய கிராமம் வேலூர் மாவட்டத்தில் அணைகட்டு தாலுக்காவில் அமைந்திருக்கிறது. இங்கு மார்க்கபந்தேஸ்வரர் கோயில் எனும் கலையம்சம் நிரம்பிய புராதனக்கோயில் உள்ளது.
1300 வருடங்கள் பழமையான இக்கோயில் பிரம்மாண்ட ராஜகோபுரம் மற்றும் சிற்பக்கலை வடிப்புகளுடன் காட்சியளிக்கிறது. அழகிய தூண்கள் மற்றும் கல்வெட்டு பொறிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம்.
வேலூர் நகரத்திலிருந்து 15 தூரத்திலுள்ள இந்த கோயிலிலிருந்து ஜலகண்டேஷ்வரர் கோயிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாக சொல்லப்படுகிறது. மரகதாம்பாள் என்ற பெயருடன் இங்கு குடி கொண்டுள்ள தேவி வணங்கப்படுகிறார்.
சிவன் மற்றும் தேவி இருவரும் கிழக்கு நோக்கி வீற்றுள்ளதோடு தனித்தனி கொடிக்கம்பங்களையும் கொண்டுள்ளனர். கோயில் வளாகத்தில் உள்ள குளம் வாசலுக்கு அருகிலேயே அமைந்துள்ள சிங்க முக சிலையை கொண்டுள்ளது.
இது சிம்மக்குளம் என்றே அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கோயிலின் கிழக்கு பகுதியில் ஒரு அழகிய கோபுரமும் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தின் இரு புறமும் அமைந்துள்ள இரண்டு கல்யாண மண்டபங்கள் கோயிலின் முக்கிய அம்சங்களாக சொல்லப்படுகிறது. இவற்றின் கலையம்சம் நிரம்பிய தூண்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications