கைலாசகிரி என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதி மிக அற்புதமான இயற்கை அழகுடன் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கிறது. இதன் இடப்புறத்தில் ராமகிருஷ்ணா பீச் மற்றும் ரிஷிகொண்டா பீச் என்ற இரண்டு கடற்கரைகளும் வலப்புறத்தில் ஒரு மலையும் சூழ்ந்துள்ளன.
சிவனும் பார்வதியும் வசிக்கும் கைலாசத்தை குறிப்பிடும்படியாக இந்த இடத்துக்கு கைலாசகிரி என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயருக்கேற்றபடி இங்கு சிவன் பார்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கைலாசகிரி மலையின் உச்சிக்கு செல்வதற்கு ஒரு ‘ரோப் டிராலி’யும் (மின்சார கயிற்றுவண்டி) இயக்கப்படுகிறது.
மாலை நேரத்தில் இந்த மலையின் உச்சியிலிருந்து வைசாக் நகரத்தை ரசிக்கும் அனுபவம் பரவசமூட்டக்கூடிய ஒன்றாகும். குழந்தைகளுக்கான ஒரு குட்டி ரயில் மற்றும் ஒரு பிரம்மாண்ட தாவரக்கடிகாரம் போன்றவை இந்த மலைஸ்தலத்திலுள்ள இதர விசேஷ அம்சங்களாகும்.
அதுமட்டுமல்லாமல் டைட்டானிக் வியூ பாயிண்ட், சங்கு சக்கர நாமா, ஷாந்தி ஆஷ்ரம், கிளைடிங் பேஸ் பாயிண்ட், டெலஸ்கோபிக் பாயிண்ட் போன்ற மலைக்காட்சி தளங்களும் இந்த கைலாசகிரியில் உள்ளன். இவற்றிலிருந்து சுற்றிலுமுள்ள இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.