வைசாக் நகரத்துக்கு வெகு அருகிலேயே இந்த யரடா பீச் அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் விருப்பத்துடன் விஜயம் செய்யும் கடற்கரையாக இது திகழ்கிறது.
மூன்று புறம் பசுமையான மலைகளாலும் ஒரு புறம் வங்காள விரிகுடாவாலும் இந்த கடற்கரை சூழப்பட்டிருக்கிறது. சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கை எழிலுக்கு நடுவே, மென்மையான தங்கநிற மணற்பரப்போடு வீற்றிருக்கும் இந்த கடற்கரையின் வசீகரிக்கும் வனப்பு யாரையும் உடனே கவர்ந்துவிடக்கூடியது.
சூரிய உதயத்தின் அழகையும் இந்த கடற்கரையில் நன்றாக பார்த்து ரசிக்கலாம். சுருக்கமான ஒரு ஓய்வுப்பயணத்துக்கு ஏற்ற அமைதிக்கடற்கரையாக இந்த யரடா பீச் விளங்குகிறது. வெகு சுத்தமாக பராமரிக்கப்படும் சூழலையும் இது கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.