மலையேற்றம் ஏலகிரி உங்களுக்கு தரும் சிறந்த அனுபவங்களில் ஒன்றாக இருக்கும். அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கைக் கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் ஏழு பாதைகள் இங்கு உள்ளன.
உள்ளதிலேயே நீளமான பாதை புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையாகும். புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் உள்ளது.
இது பலராலும் விரும்பப்படும் பாதையாகும். இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.
பிற சிறிய பாதைகள்
மங்கலம் முதல் சுவாமி மலை செல்லும் 2 கி.மீ. தூரப் பாதை, தகவல் மையத்திலிருந்து கூசிக் குட்டை செல்லும் 1.5 கி.மீ. தூரப் பாதை, புதூரிலிருந்து பெருமாடு நீர்வீழ்ச்சி செல்லும் 3 கி.மீ. தூரப் பாதை, படகு வீட்டில் இருந்து புளிச்ச குட்டை செல்லும் 3 கி.மீ. தூரப் பாதை, மற்றும் நிலாவூரிளிருந்து கரடிமுனை செல்லும் 1.5 கி.மீ. தூரப் பாதை ஆகியன. மலையேற்ற அனுபவதிற்காக ஒரு முழு நாளை ஒதுக்குவது உசிதம்.