சென்ற நூற்றாண்டின் துவக்க காலங்களில் சம்பா பகுதியை ஆண்டு வந்த ராஜா பூரியை பெருமைப் படுத்தும் வகையில் பூரிசிங் அருங்காட்சியகம் 1908-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த மன்னர் தனது குடும்பத்தைப் பற்றிய மதிப்புமிக்க ஓவியங்களை இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். மேலும், சம்பா பகுதியைப் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சர்தா எழுத்துகளில் பொறிக்கப் பட்டிருக்கும் கல்வறைப் பதிவுகளையும் இந்த மியூசியத்தில் காண முடியும்.
சம்பா பகுதி மன்னர்கள் இங்கே வைத்திருக்கும் கலை தொகுப்புகளை காணும் போது கலை மற்றும் கலாச்சாரத்தில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை உணர முடியும்.
இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள குலேர்-காங்ரா பாணியிலான ஓவியங்கள் இவ்விடத்திற்கு மேலும் அழகு சேர்ப்பவையாக இருக்கின்றன. பாகவத புராணம் மற்றும் ராமாயண காட்சிகளை விளக்கும் பாசோலி ஓவியங்களும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெறத் தவறுவதில்லை.
இவ்விடத்தில் சுற்றுலாப் பயணிகளின் கருத்தைக் கவரும் மற்றுமொரு விஷயம் சம்பா ரூமல் அல்லது கைக்குட்டைகளாகும். மேலும், சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்காகவே ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள், நாணயங்கள், மலைப்பகுதிளில் அணியப்படும் நகைகள் மற்றும் அணிகலன்கள், பல்வேறு வகைகளிலான கலைநயமிக்க பொருட்கள், இசைக்கருவிகளும் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மியூசியத்தை விடுமுறை நாட்கள் மற்றும் திங்கள் கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையிட முடியும்.