மீனுளி எனப்படும் இந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மூணார் மலைவாசஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மலையேற்றம் மற்றும் சிகரமேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்காக இது பயணிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.
பல்வேறு வடிவங்களாக இப்பகுதியில் எழும்பியிருக்கும் இயற்கை அமைப்புகள் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கின்றன. இங்குள்ள ஒரு மிகப்பெரிய பாறை மற்றும் பசுமைமாறா காடுகளுக்காக இந்த மீனுளி ஸ்தலம் புகழ் பெற்று விளங்குகிறது.
500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக்கொண்ட ஒரு பிரம்மாண்ட பாறை இங்கு அமைந்துள்ளது. இந்த பாறை மீதிருந்து பெரியார் ஆறு மற்றும் பூதத்தான்கெட்டு போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த பாறைப்பீடபூமி மீதே இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒரு பசுமைச் சோலையும் அமைந்துள்ளது. வித்தியாசமான இந்த இயற்கை அமைப்பானது நம்மை இந்த பூமித்தாயின் சிருஷ்டி குறித்து வியக்க வைக்கிறது.
மலையேற்றம் மற்றும் பாறையேற்றம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள சாகசப்பிரியர்களை மீனுளி ஸ்தலம் வரவேற்று அதற்கான ஏராளமான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது.
சிகரம் ஏறுவதில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இது ஒன்றாகும். இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் வேண்டிய அளவு உணவுப்பொருட்கள் தண்ணீர் போன்றவற்றுடன் பயணம் மேற்கொள்வது சிறந்தது.