இராமேஸ்வரத்திலுள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் உள்ளூர்வாசிகளிடம் பெருமதிப்பு பெற்ற கோவிலாகும். இராமேஸ்வரத்தின் முக்கிய கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இராமநாதசுவாமி கோவிலில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ன இக்கோவிலை எளிதில் அடையலாம்.
ஸ்ரீ இராமருக்கான இந்த கோவிலுக்கு, ஒவ்வொரு வருடமும் நிகழும் தசரா திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 14-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை, இராமநாதபுரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளே கட்டியுள்ளனர். எனவே தான், இந்த கோவில் இராமேஸ்வரம் நகரத்திலிருந்து சற்று வெளியே உள்ளது.
இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதி மிகவும் நன்றாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மரங்களின் நிழல்களில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாற முடியும்.
இளவேனிற்காலத்தில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்கள் நிறைந்த தோட்டம், வண்ணமயமான பூக்களின் படையெடுப்பிற்குள்ளாகி அற்புதமான காட்சிகளை தரும். இந்த கோவிலின் பெரிய மணிகளிலிருந்து எழும் மகிழ்ச்சியைத் தூண்டும் புனித ஒலி இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்வூட்டும்.