சிப்சாகர் நகரில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் அஹோம் சாம்ராஜ்ய அரண்மனை, தளாதள் கர் ஆகும். அஹோம் சாம்ராஜ்யத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அரண்மனையாக விளங்குகிறது தளாதள் கர்.
இந்த அரண்மனையைக் கட்டியவர் சுவர்கதியோ ருத்ர சிங்கா என்னும் அஹோம் அரசர். அரசர் தன்னுடைய தலைநகரை கர்கோவோனில் இருந்து ரங்க்பூருக்கு (தற்போது சிப்சாகர்) மாற்றம் செய்த போது இந்த அரண்மனையைக் கட்டினார்.
1698-ஆம் ஆண்டு அரண்மனைக் கட்டும் பணிகள் தொடங்கி, 170-1703 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. 7 மாடிகளைக் கொண்ட இந்த அரண்மணையின், மூன்று மாடிகள் பூமிக்கு அடியில் உள்ளன. அரசரின் பொருட்களை சேமித்து வைப்பதற்காக இந்த மூன்று மாடிகள் பயன்பட்டிருக்கின்றன.
சுவர்கதியோ ருத்ர சிங்கருக்கு பிறகு பல அஹோம் மன்னர்கள் இந்த அரண்மனையை மேலும் அழகுபடுத்தினர். அசாம் மாநிலத்தில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக தளாதள் கர் விளங்குகிறது.
அரண்மனையில் இருக்கும் சிற்பங்கள், படிக்கட்டுகள் மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த மேற்கூறை போன்றவை சுற்றுலாப் பயணிகளை மெய்சிலிர்க்க வைக்கிறது.