கோதாவரி ஆறும் மங்கீரா ஆறும் சங்கமிக்கும் நிசப்தமான ஸ்தலத்தில் இந்த பஸரா சரஸ்வதி கோயில் வீற்றுள்ளது. பஸார் எனும் கிராமப்பகுதியில் இது அமைந்துள்ளது.
கல்வி மற்றும் அறிவுக்கான கடவுளாக பூஜிக்கப்படும் சரஸ்வதி தேவிக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் சரஸ்வதி தேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள பழமையான கோயில்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ஹிந்து புராண ஐதீகங்களின்படி, இந்த கோயில் ஸ்தலமானது வேத வியாச முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. மண்ணால் உருவாக்கப்பட்ட சரஸ்வதி, லட்சுமி மற்றும் காளி ஆகிய முப்பெருந்தேவியரின் சிலைகளை பிரதிஷ்டை செய்து அவர் வணங்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது.
பின்னாளில் அதே ஸ்தலத்தில் சாளுக்கிய மன்னர்கள் சரஸ்வதி தேவிக்கான இந்தக் கோயிலை கட்டியுள்ளனர். பஞ்சமி மற்றும் நவராத்திரி திருவிழாக்கள் இக்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
மேலும், அட்சர அப்பியாசம் எனும் விசேஷ சடங்கு ஒன்றும் இந்த கோயிலில் நடத்தப்படுகிறது. ஒரு குழந்தை தனது கல்வியை பெறத்துவங்குவதற்கான மங்கல நாளாக இது இந்தக்கோயில் ஸ்தலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications