அடூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிங்கநாடு எனும் சிறிய கிராமத்தில் திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயில் அமைந்திருக்கிறது.
திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயிலில் ஆண்டு தோறும் கெட்டுக்காழச்சா எனும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அப்போது ஏராளமான பக்தர்களும், பயணிகளும் கோயிலை தேடி படையெடுத்து வருவது போல் பேரார்வத்துடன் வருவார்கள்.
இந்த திருவிழாவின் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக செல்வார்கள். அந்த சமயத்தில் மாபெரும் மரத்தேர் ஒன்றும், காளை ஒன்றும் பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும்.