மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கும் எண்ணற்ற அருவிகளில் கூட்லு தீர்த்த அருவி மிகவும் அழகானது. அகும்பே வரும் பயணிகள் இந்த அருவியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். 126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும். இதன் புனித தன்மையின் காரணமாக ஒரு காலத்தில் இங்கு முனிவர்கள் தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications